Sunday, November 27, 2011

ஷக்தி கொடு....5

எதுக்குடா இத்தனை இச் வைக்கிறே செல்போன் ஈரமாகிடப்போகுது.

உன்னோட 5.5 அடி திருவுடலில் நிறைய இடமிருக்கே. எல்லாத்தையும் கவர் செய்ய வேண்டாமா!

****************************************************************************************************************

நான் தான் செலக்சன் செய்வேனென்று அடம்பிடித்து எனக்கேற்ற சட்டையை தேட துவங்கினாள்.

கடையை சுத்தி சுத்தி பார்த்ததில் ஒரே ஒரு பெண்தானிருந்தாள் இவளை தவிர.

விலகி தெரிந்ததை ஆர்வக்கோளாறால் வயதுகோளாறால் ஒரக்கண்ணில் ரசிப்பதை பார்த்து விட்டவள் நங்கென்று ஒரு கொட்டுவிட்டபடியே

இந்த சட்டை எப்படி இருக்கென்றாள். எதுக்கு வம்பென்று நல்லாயிருக்கென்றேன்.

பில் செய்யும் போதுதான் கவனித்தேன் சட்டையின் விலையை.

ஒழுங்கா இருந்திருந்தா காஸ்ட்லி சட்டை கிடைச்சிருக்கும்.

****************************************************************************************************************
நீண்ட பயணத்தில் உன் தோளில் சாய்ந்து உறங்கவேண்டும் என்றவளிடம்,

என் தூக்கத்தை ஏனடி கெடுக்கிறாய் என்றேன் பகடியாய்!

இல்லேனா மட்டும் தூங்கிடுவியாக்கும் என்றாள் செல்ல கோபமாய்.

****************************************************************************************************************
உன் உதடுகள் அழகாக இருக்கிறது என்பதோடு நிறுத்தியிருக்கலாம்!

ஒப்பிடுகிறேன் பேர்வழியென்று அஞ்சலி தேவி போலிருக்கிறது என்று சொல்லியிருக்க கூடாது.

ம்ம்ம் லைலா உதடுகள் போல் என்று சொல்லித்தொலைத்திருக்கலாம்.

லைலா ஏன் அப்போது நியாபகம் வராமல் போய்ந்தொலைந்தாள்.

ம்ம்ம் அடுத்த முறை முத்தமிடும் போது உதட்டை கடிக்கப்போகிறாள்.

அய்யோ ஒரு வாரம் பக்கார்டி குடிக்கமுடியாமல் போகுமோ!

****************************************************************************************************************

தேடினியா என்று ஒரு எஸ் எம் எஸ் ஷக்தியிடமிருந்து.

அய்யய்யோ நேற்றிரவு பேசும் போது எதோ தேடித்தர சொல்லியிருக்கிறாள் போல என யோசிக்கத்தொடங்கினேன்.

எதும் நியாபகம் வரவில்லை.

இருந்தாலும் ஒரு சேப்டிக்கு வெயிட் தேடிக்கிட்டு இருக்கேன் கிடைச்சதும் சொல்றேன் என்றேன்!

உடனடியாக போன் அவளிடமிருந்து. பதறி பவ்யமாக எடுத்து பேசினேன்.

பேசியப்பின்தான் புரிந்தது.

நான் ஒவ்வொரு இரவும் உன்னுடனே இருப்பது போலவே நினைத்துக்கொள்வேன். கனவில் நீ வருவாய், விடிந்ததும் பதறிப்போவேன். நீ அருகில் இல்லையென்று தேடுவேன், பிறகுதான் அது ஒரு கனவென்றுணர்வேன் என ஒரு பிட்டு போட்டிருந்தேன்.

அதைத்தான் கேட்டிருக்கிறாள் இன்னொசன்ட் கேர்ள்!

****************************************************************************************************************

உன் மேல் மோகம்
கொள்ளும் தருணத்தில்
வெடித்து சிதறும்
கொதிகலனாகிறேன்.
வெடித்து சிதறும்
கடைசி நொடியில்
கடவுள் மின்னி
சிரிக்கிறார்....!

****************************************************************************************************************

உன்னுடன் உரையாடுகையிலே
காதலை காமமும்
காமத்தை காதலும்
ஒவ்வொரு முறையும்
முந்துகின்றன..

****************************************************************************************************************

காரின் கதவு வழியாக எட்டிப்பார்த்தபடியே ஒரு நாய் குட்டி பயணிப்பதை ரசித்துக்கொண்டிருக்கையில் இதயத்தினருகில் சின்ன எர்த் க்வேக்.

ஜெஸ்ஸியிடமிருந்து போன்.

ஹலோ சொல்ல கூட அவகாசம் தராமல் பொறிந்து தள்ளிவிட்டால்.

யார் ஹாசினி, யார் ஷக்தி என்பதே அவள் பொறியலுக்கு காரணம்.

உனது வெவ்வேறு படிமங்கள் என்று கொஞ்சினேன்!

கெட்டவார்த்தைப்போல எதோ ஒன்றை உதிர்த்தபடி வைத்து விட்டாள்!

எந்த ஐடியிலிருந்து வேடிக்கை பார்க்கிறாள்னே தெரியலையே!

****************************************************************************************************************

என்னிடம் மட்டும் பேச வேண்டுமென்கிறாள் ஷக்தி.

அடிப்பெண்ணே!
கரைதாண்டும் காட்டாறு என் காதல்.
அதன் சுழலில் தனியாக சிக்கி மூழ்காதே என எச்சரிக்கிறேன் நான்.

போடா ஸ்டுபிட் என்றபடியே கைக்கோர்த்து தோளில் சாய்ந்து கொள்கிறாள்.

மூழ்கிகொண்டிருக்கிறேன் மெதுவாக!
****************************************************************************************************************

ஷக்திக்கு நான் அவ வீட்டிலே இருக்கும் போது கால் பண்ணிடுவேனோனு பயம்.

இப்பதான் வயித்துல 100 பட்டாம் பூச்சி பறக்க ஆரம்பிச்சிருக்கு. ஐம் எஞ்சாய் இட். அதனால இப்போதிக்கு அது ஆயிரமாகிற வரை பண்ணமாட்டேன்னு சொன்னேன்.

சிறிய இடைவெளிவிட்டு அப்போ 1000ம் தாண்டினா பண்ணுவியா என்று கேட்கிறாள்.

என்ன செய்ய இவளை கட்டி முத்தம் தருவதை தவிர!?

****************************************************************************************************************

குழந்தைகளிடம் ஒற்றை சிப்ஸ் கேட்பதும் காதலிகளிடம் ஒற்றை கிஸ் கேட்பதும் நீண்ட போராட்டத்திற்கு பிறகே கிடைக்கும்.

ஆனால் குழந்தைகள் மாதிரி காதலிகள் பரந்த சிந்தனை கொண்டவர்கள் இல்லை.

காதலிகள் கொடுத்ததை திருப்பி கேட்பார்கள்!

****************************************************************************************************************

நான் யாரு உனக்கு என்றாள் பேச்சின் இடையில்

யாதுமாகி நிற்கிறாய் என்றேன்.

அப்படின்னா? என கேட்டாள்...

நீயே எல்லாமும்(சகலமும்) ஆனவள்..

எல்லாமும்னா, மீண்டும் கேட்டாள்.

எல்லாமும்தான் என்றேன்.

சிறிய யோசனைக்குப்பின் முடியாதென்றவள்
மேலும் தொடர்ந்தாள் என்னால் ஜெஸ்ஸியாக
இருக்க முடியாது. எனக்கு ஜெஸ்ஸியை சுத்தமாக
பிடிக்கலை கார்த்திக் என்று விசும்பினாள்...

பின் அங்கிருந்து வெளியேறிவிட்டால்...

ம்ம்ம்... ஒரு கிஸ் மிஸ்ஸாகிப்போச்ச்சு...

(So Sad. ஓவர் ஸ்மார்ட்னு காமிச்சிக்க பழைய ஆளுங்களைப்பத்தி சொன்னா இப்படிதான் சொதப்பும் )

****************************************************************************************************************

எங்கே இருக்க

ஷாப்பிங் வந்தேன்..

ஓஹ். என்ன சத்தம்...

அது ஆதர்ஷ் கூட ஐஸ்க்ரீம் ஷாப் வந்தேன்.
அங்கேதான் சத்தம்.

வாட்.. ஐஸ்க்ரீமா... ரெண்டு நாள் முன்னாடி வாங்கிக்கொடுத்தியே?

ஆமா ரெண்டு நாள் முன்னாடி!

நேத்தும் வாங்கித்தந்த?

ஆமாம் நேத்தும்!

இன்னிக்கு கூட?

அப்சலூட்லி...

அறிவிறுக்கா உனக்கு. சின்னக்குழந்தைங்க அது.. உன்ன மாதிரி தடிமாடா

(இப்ப புரியுதா பசங்க ஏன் பொண்ணுங்ககிட்ட சின்ன விசயம் முதல் பெரிய விசயம் வரை பொய் சொல்றாங்கனு)

****************************************************************************************************************

இச்சுனு ஒரு சத்தம். அழுத்தமாக கூட இல்லை,
ஜஸ்ட் மோலோட்டமான சத்தம் தான்.
ஆனாலும் நேரிலேயே பெற்றது போல இனிக்கிறது.....

****************************************************************************************************************

ஒவ்வொரு இரவும் நாளை விடியாது என்ற பதற்றத்துடனே
தொடர்கிறது உன்னுடனான பின்னிரவு உரையாடல்கள்

****************************************************************************************************************

No comments:

Post a Comment