Sunday, November 27, 2011

ஷக்தி கொடு....4

இடி இடிக்குதுடி

இடிக்கட்டும்

மழை பெய்துடி

பெய்யட்டும்

அது என்னை கிண்டல் பண்ற மாதிரி இருக்குடி!

ஓஹ், அதெப்படி!

உன்னை நான் மிஸ் பண்ணிட்டு இருக்கிறதை பார்த்து ஒப்பாரி வச்சு அழுதுங்க என்னைப்பார்த்து!

போடா நீயும் உன் கற்பனையும்

********************************************************************************************************

ஹேய் என்னடா பண்ற, இங்க சாரல் அடிக்குது!

கதவை சாத்திக்கோ!

க்ளைமேட் ரொம்ப சில்லுனு குளிரா இருக்கு

ஸ்வெட்டர் போட்டுக்கோ!

உன்னை இப்பவே பார்க்கனும் போல இருக்கு!

அச்சச்சோ ஆபிஸ்ல இருக்கேனே

அப்படியே கட்டிப்பிடிச்சிகனும் போலிருக்கு

இரு லீவு போட முடியுதானு பார்க்கிறேன்

அப்படியே உன் மேல சாஞ்சிக்கிட்டு...

5 மினிட்ஸ்ல கிளம்பிடறேன்!

ஒன்னும் தேவையில்லை. ஐ லவ் யூ இத சொல்லதான் கூப்பிட்டேன். நைட் எக்ஸாம்க்கு ப்ரிபேர் பண்ணிட்டு இருந்தேன் டயர்டா இருக்கு. என் டெடியை கட்டிப்பிடிச்சிட்டு தூங்கப்போறேன் டாடா!

ம்ம்ம் நான் பொம்பளை டெடிபியரை கட்டிப்பிடிச்சிக்கிட்டு தூங்கினா நல்லாவா இருக்கும்!

********************************************************************************************************

உனக்கு என்ன ஸ்வீட் பிடிக்கும் என கேட்ட அடுத்த நொடியிலேயே நீ தான் என்றேன்.

இப்படிலாம் எப்ப பார்த்தாலும் ஜொள்ளிபைங்னா கட் பண்ணிடுவேன் என்று பயங்கரவாதம் புரிந்தாள்!

நான் பால் கோவா, குலாப் ஜாமூன் என்றேன்.

இதெல்லாம் எனக்கு எப்ப கொண்டு வந்து தரப்போற!

உனக்கு கொடுக்கப்போறேன்னு எப்போ சொன்னேன். இந்த தீபாவளிக்கு உனக்கு பிடிச்சது சாப்பிடப்போறேன்.

எனக்கு பிடிச்சது உன் இதழும் தான். அதெப்படி சாப்பிடுவ.

போடா பொறுக்கி!
அய்யோ டூயூசனுக்கு நேரமாகிடுச்சி. போன் பண்ணாத மெஸெஜ் பண்ணாத பை பை பை!

********************************************************************************************************

ஏய் நேத்து நைட் என் கனவிலே வந்தே! என்றாள்
ஒரு குழந்தையின் குதூகலத்துடன்..

அய்யய்யோ நான் என்ன செஞ்சேன் கனவிலே!

ம்ம்ம் நீ ஒன்னும் செய்யலை.. நான் தான்...

நீய்ய்ய்யா!

ச்ச்சீ.. அசிங்கமா பேசாதே... நான் உன்னை பாட்டுபாடி
தூங்கவச்சேன்..

அவ்ளோதானா...

ம்ம்.. அதுக்கு முன்னாடி பாவம்னு
ஒன்னே ஒன்னு மட்டும் கொடுத்தேன்

கனவிலே மட்டும்தானா நிஜத்திலும்
நான் பாவம்தானேடி என்றதும்...

ஸ்கூலுக்கு நேரமாச்சு என்றபடியே துண்டித்துவிட்டாள்....

********************************************************************************************************
நீயே என் வானமாக இருக்கிறாய்
நீயே என் உதயமாக இருக்கிறாய்
நீயே என் அஸ்தமனமாக இருக்கிறாய்
நீயே என் ஒளியாக இருக்கிறாய்
நீயே என் இருளாக இருக்கிறாய்
நீயே என் நிலவாக இருக்கிறாய்
நீயே என் கடலாக இருக்கிறாய்

நீயே என்.......வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

கொஞ்சம் அருக்காம இருக்கியா, என்றாள் முத்தபிட்டபின்பு...

ம்ம்ம் கவிதையைப்பற்றி ஒன்னும் தெரியாத ஞான சூன்யத்தைலாம்
காதலிச்சாலும் தேவையானது கிடைக்கிறது.
********************************************************************************************************
என் இரு கைகளால் உன் கன்னத்தை பிடித்துக்கொண்டு
உன் நெற்றியில் முத்தமிட ஆவலாக இருக்கிறேன்.

ம்ம் எப்பவும் இதையே பேசாதடா...

எப்பவும் இதே இல்லடி. இது ஆரம்பம், அடுத்து காது, அதன் பின் கன்னம்... அப்புறம் இதழ்... அடுத்து.....

ஹேய் கட் பண்ணாத கட் பண்ணாத கட் பண்ணாத கட்....
வச்சிட்ட்டா...

நீதி: ஓவர் எக்ஸ்பெட்டேசன் உடம்புக்கு நல்லதில்லை
********************************************************************************************************

நான் உன்னை காதலிக்கிறேன்,
நான் உன்னை நேசிக்கிறேன்
பைத்தியம் போல், ஒரு சிப்பாய் போல
ஒரு திரைப்பட நட்சத்திரமாக
நான் உன்னை காதலிக்கிறேன்,
நான் உன்னை காதலிக்கிறேன்,
நான் உன்னை காதலிக்கிறேன்,
நான் உன்னை நேசிக்கிறேன்
ஒரு மன்னர் போல ஒரு ஓநாய், என்று
ஒரு மனிதராக நான் இல்லை
நீங்கள் பார்க்க,
நான் உன்னை நேசிக்கிறேன்

இப்படி ஒரு அபரீதமான கவிதையை அவளுக்கு அனுப்பி வைத்திருந்தேன்.

உடனே அவளிடம் வந்தது ஒரு எஸ் எம் எஸ்.

e t'aime, je t'aime
Comme un fou, comme un soldat
Comme une star de cinéma
Je t'aime, je t'aime, je t'aime, je t'aime
Comme un loup, comme un roi
Comme un homme que je ne suis pas
Tu vois, je t'aime comme ça.

ம்ம்ம்.. கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் ஒழிக

********************************************************************************************************

போய் தொலை என்றாள் எதோ கோபத்தின் காரணமாக!

நான் உள்ளேதாண்டி இருக்கேன் என்றேன்

எங்க உன் ரூம்லயா என்றவளிடம் தொடர்ந்தேன்

இல்லை உன் தமனி சிரை அறைகளில் என்று.....

அப்புறம் என்ன ஓவர் மொக்கை போடுறேனுட்டு போன் கட் பண்ணிட்டா. க்ரேஸி கேர்ள்...

********************************************************************************************************
என்னடா உரையாடல்கள் தீர்ந்துடுச்சா?
மெளனமாகவே இருக்கே என்றபடியே கைக்கோர்த்து என்னைய பார்த்துக்கொண்டிருந்தாள்.

தொண்டையை தாண்டி வார்த்தைகள் வரவில்லை!

ம்ம்ம்ம் சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க!
********************************************************************************************************


No comments:

Post a Comment