ஒரு முறை நண்பர்களுடன் சேலம் ஏற்காடு சென்று திரும்புகையில் இரண்டு பெண்கள் ஸ்கூட்டியில் சென்றதை கவனித்தோம்.
மைல்டா இருந்த என்னிடம் முடிஞ்சா அவகிட்ட பேசுடா என்று உசுப்பேற்றினான் ஒருவன்.
அந்த ஸ்கூட்டியை பாலோ செய்து சேஸ் செய்து முந்திய பின் அந்த ஸ்கூட்டி பெண்ணிடம் ஹைதர் காலத்து டெக்னிக்கான
நீங்க திவ்யாதானே என்று பிட்டை போட்டேன்.
முதலில் விழித்த அந்த பெண் எங்க அப்பா பேரை சொல்லி அவர் பையன் தானே, எங்க அண்ணன் பேரை சொல்லி அவர் தம்பி தானே என்றாள்.
பீதியில் இருந்த என்னைப்பார்த்து மேலும் கூறினாள் நான் உங்க பக்கத்து வீட்டிலே தான் இருக்கோமென்று.
அன்று முடிவெடுத்தேன். இனிமே பெண்ணைப்பார்த்தா மண்ணைப்பார்க்க கூடாதென்று!
(ஜெ ஜெ சில குறிப்புகள் முன்னுரையின் ஒரு பகுதியிலிருந்து)
No comments:
Post a Comment