Friday, September 30, 2011

ஜெ.ஜெ சில குறிப்புகள் - 5

பலாத்காரம் பற்றி பேச்சு ஓடிக்கொண்டிருந்தது
நண்பர்களுடனான ஒரு இனிய மாலைப்பொழுதொன்றில்.

ஊசியிடம்கொடுக்காமல் நூல் நுழையாதென்றான்
பெண்கள் என்றால் அதுக்குத்தான் எனும் சிந்தைகொண்டொருவன்.

அதை ஆமோதித்த ஒருவன் சொன்னான் இருவர் கண்டிப்பாக தேவை
பலாத்கார புணர்ச்சி நிகழ்த்தவென்று.

எதேச்சையாக சந்தித்த நண்பனொருவனிடம் இருந்தது
கலவிகள் காட்சிகள் கொண்ட செல்போன் ஒன்று..

நூற்றுக்கணக்கான காட்சிகளில் ஒன்றை தேடிப்பிடித்து
தேர்வுசெய்து ஒளிபரப்பினான் நண்பர்களிடையே..

நிர்வாணமாக்கப்பட்ட பெண்ணின் முலைகளை
ஜூம் செய்கிறது அந்த கைப்பேசி கேமரா

கையெடுத்து கும்பிடுபவள் இந்தியச்சியாக இருக்கலாம்
என்றான் தமிழ்தேசியவாதியொருவன்...

இல்லை இல்லை அவள் தமிழச்சிதான்
அவள் முகரைக்கட்டையும் பின்புலங்களும்
அதை நிருபிக்கிறதென்றான்
இந்தியத்தேசியவாதியொருவன்...

அவள் இந்து... அவள் கிருத்துவச்சி.. அவள் இஸ்லாமி
என மதச்சண்டைக்கு காரணமாகயிருக்கப்போகிறவர்களிடம்
குறிகோல் கொண்டாடுமொருவன் உரைத்தான்
அவள் மலையாளிதானென்று திட்டவட்டமாக

இவர்களின் பேச்சுகளுக்கிடையே ஒளிப்படக்காட்சி
கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து சென்றது...

கால்களை குறுக்கி புணர்வை தடுக்க முயன்றவளை
பொளேர் பொள்ளேர் என்று தாக்கிக்கொண்டிருந்தான்
காட்சியில் தோன்றிய கணவானொருவன்...

அரைமயக்கத்தில் சென்றவளின் காலிடுக்கு
குழியில் குறியை செலுத்தத்தொடங்கினான்
எதிர்ப்புகளில்லாமல் சுலபமாக

காட்சியை உன்னிப்பாக கவனித்த விவாத குழுவினர்
முடிவில் ஒருவர் பின் ஒருவராக கழிவரைச்சென்று
திரும்பினர் என்று முடிந்த கவிதையை

கண்ணாயிரம் பெருமாள் வாடை அடிக்கிறதே \
என்றார்கள் சிலர்...

திருத்திக்கொள்கிறேன் என்றானவன்
மெதுவாக....

ஒளிக்காட்சியில் தோன்றியவள்
என்ன ஆனாள் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை....

ம்ம்ம் பெண்ணாக பிறந்திருக்கலாம்...
ஜாலிதான்.....

No comments:

Post a Comment